பேராவூரணியில் வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி
பேராவூரணியில் வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட புதிய வாக்காளர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற பேரணியை வட்டாட்சியர் எல்.பாஸ்கரன் தொடங்கி வைத்தார். தேர்தல் துணை வட்டாட்சியர் செல்வகுமார், கூடுதல் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் சுந்தரமூர்த்தி, வருவாய் ஆய்வாளர்கள் பாண்டியராஜன், ஜோதி, சுப்பிரமணியன், கிராம நிர்வாக அலுவலர் முத்துகிருஷ்ணன், கிராம உதவியாளர்கள் பங்கேற்றனர். பேரணியில் பங்கேற்ற அரசு, தனியார் கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை கைகளில் ஏந்திச் சென்றனர்.
நீலகண்டப் பிள்ளையார் கோயிலில் தொடங்கிய பேரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. முடிவில், வாக்காளர் விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு வருவாய் கோட்டாட்சியர் ஐ.மகாலெட்சுமி பரிசுகளை வழங்கினார்.