ஒரத்தநாடு துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (செப். 15) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவிருப்பதால், இங்கிருந்து மின்சாரம் பெறும் ஒரத்தநாடு, கண்ணதங்குடி, ஆழியவாய்க்கால், புலவன்காடு, பின்னையூர், பூவத்தூர் மற்றும் அதை சார்ந்த பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின்விநியோகம் இருக்காது என ஒரத்தநாடு மின்வாரிய செயற்பொறியாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.