தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தொடக்க நாள் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இப்பல்கலைக்கழகத்தை அண்ணா பிறந்த நாளையொட்டி 1981 ஆம் ஆண்டு செப். 15-ம் தேதி மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். தொடங்கி வைத்தார். இப்பல்கலைக்கழகத்தின் 38 ஆம் ஆண்டு தொடக்க நாள் விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, பல்கலைக்கழகத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கும், எம்.ஜி.ஆர். சிலைக்கும் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பொறுப்புக் குழு உறுப்பினர் செ. சுப்பிரமணியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இவ்விழாவில் பல்கலைக்கழக ஆசிரியர்கள், பணியாளர்கள், மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.