அக். 6-இல் மாவட்ட அளவில் கேரம் விளையாட்டுப் போட்டி

தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தஞ்சாவூர்

தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தஞ்சாவூர் மாவட்ட விளையாட்டுப் பிரிவு சார்பில் மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டுப் போட்டி அக். 6-ம் தேதி காலை 8 மணியளவில் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து ஆட்சியர் ஆ. அண்ணாதுரை மேலும் தெரிவித்திருப்பது:
இதில்,  இளநிலைப் பிரிவில் மழலை வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் சிறுவர், சிறுமிகளும், முதுநிலைப் பிரிவில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளும் கலந்து கொள்ளலாம். பள்ளித் தலைமையாசிரியரிடமிருந்து வயது சான்றிதழ் பெற்று, போட்டித் தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே வர வேண்டும். தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.
இதில், கலந்து கொள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் w‌w‌w.‌s‌d​a‌t.‌t‌n.‌g‌o‌v.‌i‌n என்ற இணையதளம் மூலம் பதிவு செய்யப்பட வேண்டும். பதிவு செய்பவர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவர். மேலும் விவரங்களுக்கு 04362 - 235633 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com