தஞ்சாவூர் ராஜராஜசோழன் மணிமண்டபத்தில் தூய்மை இந்தியா இயக்கம் சார்பில் தூய்மை விழிப்புணர்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், அமேசிங் உணவாக்க மேலாண்மை நிலையம், அரசுத் தொழில்நுட்பப் பயிலகம், குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரி ஆகியவற்றிலிருந்து சமூகச் சேவை இயக்கத்தைச் சேர்ந்த சுமார் 100 மாணவ, மாணவிகள், மாநகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியை நகர் நல அலுவலர் நமசிவாயம் தொடங்கி வைத்தார். இன்டாக் கெளரவச் செயலர் எஸ். முத்துக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.