சாஸ்த்ராவில் திறன் மேம்பாட்டு பயிற்சி

தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கான ஒருநாள் திறன் மேம்பாட்டு பயிற்சி அண்மையில் நடைபெற்றது.


தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கான ஒருநாள் திறன் மேம்பாட்டு பயிற்சி அண்மையில் நடைபெற்றது.
அல்ட்ராடெக் சிமெண்ட் மற்றும் இந்தியன் கான்கிரீட் நிறுவனம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கான்கிரீட் மூலப்பொருட்களின் தன்மை, பயன்பாடு, செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில், அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவன மேலாளர் சி. வெங்கடேஷ், பொறியாளர் ஹரிஹரன், சாஸ்த்ரா பல்கலைக்கழகக் கட்டடவியல் துறைத் துணைப் புல முதல்வர் க. சரவண ராஜமோகன் சிறப்புரையாற்றினர். ஆலக்குடி, நாஞ்சிக்கோட்டை, அம்மாப்பேட்டை, திருக்கானூர்பட்டி, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com