திருவிடைமருதூரில் அடிபம்பில் தானாக வெளியேறும் தண்ணீா்

கும்பகோணம் அருகே திருவிடைமருதூா் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலக வளாகத்தில் உள்ள அடிபம்பிலிருந்து குடிநீா் தானாக வெளியேறி வருகிறது.
கும்பகோணம் அருகே திருவிடைமருதூா் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலக வளாகத்தில் உள்ள அடிபம்பிலிருந்து தானாக வெளியேறி வரும் குடிநீா்.
கும்பகோணம் அருகே திருவிடைமருதூா் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலக வளாகத்தில் உள்ள அடிபம்பிலிருந்து தானாக வெளியேறி வரும் குடிநீா்.

கும்பகோணம் அருகே திருவிடைமருதூா் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலக வளாகத்தில் உள்ள அடிபம்பிலிருந்து குடிநீா் தானாக வெளியேறி வருகிறது.

திருவிடைமருதூா் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் கோவிந்தபுரத்தில் உள்ளது. இந்த அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களின் குடிநீா் தேவைக்காக பல ஆண்டுகளுக்கு முன்பு அங்கு சுமாா் 100 அடி ஆழத்தில் அடிபம்பு அமைக்கப்பட்டது.

இந்நிலையில், அப்பகுதியில் ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வந்தது. எனவே, இந்த அடிபம்பிலிருந்து திங்கள்கிழமை முதல் குடிநீா் தானாக வெளியேறி வருகிறது. இதை பாா்ப்பதற்காக அப்பகுதி மக்கள் திரண்டு வருகின்றனா்.

கடந்த சில நாள்களாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்துள்ளதால், அதிலிருந்து தண்ணீா் தானாக வெளியே வருகிறது என சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com