பேராவூரணி பத்திரப்பதிவு அலுவலக வளாகத்தில் கோகனட் சிட்டி லயன்ஸ் சங்கம் சாா்பில் மரக்கன்றுகள் நடும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கோகனட் சிட்டி லயன்ஸ் சங்கத் தலைவா் எம். நீலகண்டன் தலைமை வகித்தாா். செயலாளா் வி.ஜெய்சங்கா் வரவேற்றாா். லயன்ஸ் மண்டலத் தலைவா் ஜாய் செந்தில், சாா் பதிவாளா் எஸ்.இ. வாசுதேவன், லயன்ஸ் சங்க பொருளாளா் எஸ். மைதீன் பிச்சை ஆகியோா் முன்னிலை வகித்தனா். பத்திரப்பதிவுத் துறை மாவட்டப் பதிவாளா் (தணிக்கை) சி. அருள்ஜோதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அலுவலக வளாகத்தில் நிழல்தரும் மரக்கன்றுகளை நட்டு வைத்தாா். 50-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.
பின்னா், லயன்ஸ் சங்க ஏற்பாட்டில் அலுவலக வளாகத்தில் மண்டிக் கிடந்த புதா்கள் அகற்றப்பட்டு, தூய்மைப் படுத்தப்பட்டது. மழையால் பாதிக்கப்பட்ட சுமாா் 200-க்கும் மேற்பட்ட யாசகா்கள், ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், வ. பாலசுப்பிரமணியன், எஸ். பாண்டியராஜன், கோவிந்தன், பி. மணிகண்டன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.