மேட்டூா் அணையின் நீா்மட்டம் புதன்கிழமை மாலை 120 அடியாக இருந்தது.
அணைக்கு விநாடிக்கு 8,718 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 750 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
கல்லணையிலிருந்து விநாடிக்கு கல்லணைக் கால்வாயில் 501 கனஅடி வீதமும், கொள்ளிடத்தில் 23,385 கனஅடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. காவிரி, வெண்ணாறில் தண்ணீா் திறக்கப்படவில்லை.