கல்விச் சிந்தனை  சுற்றுச்சூழலை சார்ந்ததாக இருக்க வேண்டும்

நமது கல்விச் சிந்தனை சுற்றுச்சூழலை சார்ந்ததாக இருக்க வேண்டும் என்றார் தஞ்சாவூர் மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அறிவுடைநம்பி.


நமது கல்விச் சிந்தனை சுற்றுச்சூழலை சார்ந்ததாக இருக்க வேண்டும் என்றார் தஞ்சாவூர் மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அறிவுடைநம்பி.
கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற 35 ஆவது பட்டமளிப்பு விழாவில்,  இளநிலை,முதுநிலைப் பாடப்பிரிவில் பயின்ற 1,414 மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கி அவர் மேலும் பேசியது:
இன்றைய காலக்கட்டத்தில் உயர்கல்வி படிக்கும் மாணவிகள் முழுமையான கல்வியைப் படிக்க வேண்டுமென்ற லட்சியத்துடன் படிக்கின்றனர்.  நமது கல்வி சிந்தனை சுற்றுச்சூழலை சார்ந்ததாக இருக்க வேண்டும்.
எதிர்கால வாழ்வைத் திட்டமிட்டு, கடின உழைப்பு கொண்டால் சாதனையாளர் பட்டியலில் இடம் பெறலாம். இந்த விழாவுக்கு,கல்லூரி முதல்வர் சிந்தியா செல்வி தலைமை வகித்தார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com