தஞ்சாவூர் மற்றும் சுற்றுப் பகுதிகளில் சனிக்கிழமை (ஜன.19) மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மருத்துவக் கல்லூரி சாலை உதவி செயற் பொறியாளர் எஸ். பஞ்சநாதன் தெரிவித்திருப்பது: தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. எனவே, மருத்துவக் கல்லூரி, ஈஸ்வரி நகர், முனிசிபல் காலனி, புதிய பேருந்து நிலையம், புதிய வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, காவேரி நகர், எலீசா நகர், நூற்பாலை, நாஞ்சிக்கோட்டை சாலை, சிட்கோ, மாதாகோட்டை, வல்லம், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சை ரோலர் பிளவர் மில், வஸ்தா சாவடி, பிள்ளையார்பட்டி, மொன்னையம்பட்டி, ஆலக்குடி, கள்ளப்பெரம்பூர், திருமலைசமுத்திரம், சக்கரசாமந்தம், களிமேடு, மானோஜிப்பட்டி மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
கும்பகோணத்தில்... கும்பகோணம் சாக்கோட்டை துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (ஜன.19) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும்
கும்பகோணம் நகர், நாச்சியார்கோவில், திருநாகேஸ்வரம், சுவாமிமலை, திருக்கருக்காவூர், வலங்கைமான், ஆலங்குடி, பாபநாசம், கபிஸ்தலம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் மின்சாரம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கருணாகரன் தெரிவித்துள்ளார்.