தஞ்சாவூர் பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் துறைசார் சங்கங்களின் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் அருட்சகோதரி கேத்தலினா தலைமை வகித்தார். தஞ்சாவூர் மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் டி. அறிவுடைநம்பி சிறப்புரையாற்றினார். மேலும், வாக்குப் பதிவின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவிகள் சங்க உறுப்பினர்களின் பதவியேற்பும், அனைத்து துறைசார் சங்க உறுப்பினர்களின் பதவியேற்பும் நடைபெற்றது.
தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் எம். ஜெகதீசன் பாராட்டிப் பேசினார். இதில், பேராசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.