கும்பகோணம் மின் வாரிய அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வியாழக்கிழமை (ஜூன் 13) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் கும்பகோணம் செயற் பொறியாளர் மு. நளினி தெரிவித்திருப்பது:
கும்பகோணம் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வியாழக்கிழமை பகல் 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது. தஞ்சாவூர் மேற்பார்வைப் பொறியாளர் டி.என். சங்கரன் நடத்தவுள்ள இக்கூட்டத்தில் கும்பகோணம் நகரம், கும்பகோணம் புறநகர், பாபநாசம், கபிஸ்தலம், அய்யம்பேட்டை, திருக்கருக்காவூர், கணபதிஅக்ரஹாரம் பிரிவு அலுவலகம் பகுதியைச் சார்ந்த மின் நுகர்வோர் தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால் நேரில் வந்து தெரிவிக்கலாம்.