தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரியில் இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூன் 20-ம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து கல்லூரி முதல்வர் வெ. செந்தமிழ்ச்செல்வி தெரிவித்திருப்பது: தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரியில் ஜூன் 20-ம் தேதி காலை 10 மணிக்கு இளநிலை அனைத்து பாடப் பிரிவுகளிலும் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெறும்.
மாணவர்கள் கலந்தாய்வுக்கு ஜூன் 20-ம் தேதி காலை 10 மணிக்குள் கல்லூரிக்கு வர வேண்டும். மாணவர்கள் கலந்தாய்வுக்குத் தவறாமல் தன் பெற்றோருடன் வர வேண்டும். பெற்றோர் எவரும் உயிருடன் இல்லை என்றால் மட்டுமே பாதுகாவலருடன் கலந்தாய்வுக்கு வர வேண்டும்.
இன்று தேர்வு முடிவுகள்:
இக்கல்லூரியில் ஏப்ரல் 2019 பருவத்துக்கு உரிய பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு தேர்வுகள் நடைபெற்றன. இத்தேர்வுகளை 4,300 மாணவர்கள் எழுதினர். இத்தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை (ஜூன் 13) வெளியிடப்படவுள்ளது. பட்டமேற்படிப்பில் எம்.ஏ., எம்.எஸ்ஸி., எம்.காம். முடிவுகளும், பட்டப்படிப்பில் பி.ஏ., பி.எஸ்ஸி., பி.காம்., பி.பி.ஏ. உள்ளிட்ட தேர்வு முடிவுகளும் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு www.rsgc.ac.in. என்ற கல்லூரி இணையதளத்தில் வெளியிடப்படும்.