சந்தனமரம் வெட்டிக் கடத்தல்

பாபநாசம் அருகே கோயில் நிலத்திலிருந்த சந்தனமரத்தை வெட்டிக் கடத்திச் சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.


பாபநாசம் அருகே கோயில் நிலத்திலிருந்த சந்தனமரத்தை வெட்டிக் கடத்திச் சென்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
பாபநாசம் அருகிலுள்ள திருப்பாலைத்துறை சன்னதி தெருவைச் சேர்ந்தவர் தேவேந்திரன் (45). இவர், திருப்பாலைத்துறை பாலைவனநாதர் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை பல ஆண்டுகளாக குத்தகைக்கு எடுத்து பயன்படுத்தி வருகிறார்.இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு இந்த நிலத்திலிருந்த சந்தன மரத்தை அடையாளம் தெரியாத சிலர் வெட்டி கடத்திச் சென்றனர். இதுகுறித்து தேவேந்திரன் அளித்த புகாரின் பேரில் பாபநாசம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com