மணல் லாரி மோதி பெண் சாவு

தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை மணல் லாரி மோதியதில் ஆடு மேய்த்த பெண் உயிரிழந்தார்.

தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை மணல் லாரி மோதியதில் ஆடு மேய்த்த பெண் உயிரிழந்தார்.
தஞ்சாவூர் பள்ளியக்ரஹாரம் பெரிய தெருவைச் சேர்ந்தவர் கிரேஸ்மேரி (48). இவர் செவ்வாய்க்கிழமை காலை பள்ளியக்ரஹாரம் - குலமங்கலம் சாலையோரம் வெண்ணாற்றங்கரையில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது சாலையோரம் அமர்ந்திருந்த கிரேஸ்மேரி மீது குலமங்கலத்திலிருந்து பள்ளியக்ரஹாரம் நோக்கி வந்த லாரி மோதி,  பின்னர் மரத்தில் மோதி நின்றது. இதில், பலத்தக் காயமடைந்த கிரேஸ்மேரி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து நகரப் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com