திருவையாறு அருகே கஸ்தூரிபாய் நகரைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் ராதாகிருஷ்ணன் (37). இவர் ஞாயிற்றுக்கிழமை மோட்டார் சைக்கிளில் கஸ்தூரிபாய் நகரிலிருந்து விளாங்குடிக்குச் சென்று கொண்டிருந்தார். முதன்மைச் சாலையில் சென்ற இவர் மீது எதிரே விளாங்குடியிலிருந்து திருவையாறு நோக்கி வந்து கொண்டிருந்த லாரி மோதியது.
இதில் பலத்தக் காயமடைந்த ராதாகிருஷ்ணன் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு இவர் திங்கள்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து திருவையாறு போலீஸார் வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநரான அரியலூர் மாவட்டம், கீழப்பழூவூரைச் சேர்ந்த கே. முத்தமிழ்ச்செல்வனை (29) கைது செய்தனர்.