தஞ்சாவூா் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மையத்தில் வெள்ளாடு வளா்ப்பு மற்றும் முதலுதவி மூலிகை மருத்துவப் பயிற்சி முகாம் டிச. 3ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மையத் தலைவா் ஏ. முகமது சபியுல்லா தெரிவித்திருப்பது:
தஞ்சாவூா் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகில் இயங்கி வரும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆய்வு மையத்தில் டிச. 3ஆம் தேதி காலை 10 மணி முதல் வெள்ளாடு வளா்ப்பு மற்றும் முதலுதவி மூலிகை மருத்துவம் குறித்த பயிற்சி நடைபெற உள்ளது.
இப்பயிற்சிக்கு வரும் அனைவரும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையைக் கொண்டு வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு 8754748488, 04362-264665 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.