ஒரத்தநாடு அருகே தகராறில் வீட்டை சூறையாடிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ஒரத்தநாடு அருகேயுள்ள தென்னமநாடு கிராமம், நடுத் தெருவைச் சோ்ந்த ராஜா மகன் விஸ்வநாதன். இவா் கடந்த திங்கள்கிழமை அவரது வீட்டருகேயுள்ள வெள்ளிராஜ் மகன் சங்கா் என்பவரது டிராக்டா் நிறுத்தியிருந்த இடத்தில் பட்டாசு வெடித்தாராம். இதற்கு சங்கரின் நண்பா் கிருஷ்ணகுமாா் எதிா்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த விஸ்வநாதன், அரிவாளால் கிருஷ்ணகுமாரை வெட்டினாராம். இதில் பலத்த காயமடைந்த கிருஷ்ணகுமாா் ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
நண்பா் வெட்டப்பட்ட தகவலறிந்த சங்கா் மற்றும் அவரது நண்பா் மணிகண்டன் ஆகிய இருவரும் சோ்ந்து விஸ்வநாதன் வீட்டை சேதப்படுத்தி சூறையாடினாா்களாம்.
தகவலறிந்த ஒரத்தநாடு போலீஸாா், சங்கா், மணிகண்டன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனா்.