தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே அம்மாபேட்டை சின்னக்கடை தெரு பகுதியில் உள்ள ஆனந்த சக்தி விநாயகர், ஐயப்பன் கோயில்களின் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி கடந்த 5 ஆம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை தொடங்கியது. தொடர்ந்து ஞாயிற்றுகிழமை காலை நான்காம் கால யாகசாலை பூஜை, மஹாபூர்ணாஹூதி நடைபெற்றது. தொடர்ந்து யாத்ரா தானம், கடம் புறப்பாடு செய்து ஸ்ரீ ஆனந்த சக்தி விநாயகர், ஸ்ரீஐயப்பன் கோயில் கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி குடமுழுக்கு நடத்தினர். தொடர்ந்து மஹா அபிஷேகம், மஹா தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதங்கள்,அன்னதானம் வழங்கப்பட்டது. அன்று மாலை ஸ்ரீ ஆனந்த சக்தி விநாயகர், ஸ்ரீ ஐயப்பன் சுவாமிகள் வீதியுலா நடைபெற்றது.
விழாவில் அம்மாபேட்டை ஸ்ரீ நாட்டியாலயா கலைக் குழுவினரின் பரத நிகழ்ச்சி நடைபெற்றது. ஏற்பாடுகளை அம்மாபேட்டை ஐயப்ப பக்தர்கள், ஊர் பிரமுகர்கள் செய்திருந்தனர்.