பேராவூரணி: கிராம உதவியாளர்  பணியிடங்களுக்கு  விண்ணப்பிக்க காலம் நீட்டிப்பு

பேராவூரணி வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களில் காலியாக உள்ள 12 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு

பேராவூரணி வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களில் காலியாக உள்ள 12 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 10 ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்,  தற்போது செப்டம்பர் 17 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க காலம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 
காலிப் பணியிடங்களுக்கு பேராவூரணி வட்டத்துக்குள்பட்ட  கிராமம் மற்றும் அதையொட்டிய சுற்றுப்புற கிராமங்களில் உள்ளவர்கள் மட்டும் இன சுழற்சி அடிப்படையில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக முதுநிலை வரிசையின்படி நியமனம் செய்ய   விண்ணப்பங்களை செப். 17ஆம் தேதி   மாலை 5 மணிக்குள்  பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் .
கல்வித் தகுதி குறைந்தபட்சம் ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வில் தோல்வியுற்றவர்கள்,  சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். தகுதியுள்ள மனுதாரர்கள் பேராவூரணி வட்ட அலுவலகத்தில் நடைபெறும் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள தனியே அழைப்புக் கடிதம் அனுப்பப்படும் என  பேராவூரணி வட்டாட்சியர் க. ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com