தஞ்சாவூர் மாவட்டம்,பாபநாசம் அருகே பள்ளி மாணவி மாயமானதாக அவரது தாய் புகார் அளித்துள்ளார்.
பாபநாசம் அருகே கபிஸ்தலம் காவல் சரகப் பகுதியை சேர்ந்த ஒரு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்த 16 வயது சிறுமி கடந்த இரு தினங்களுக்கு முன் பள்ளி செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்று மீண்டும் வீடு திரும்ப வில்லை. இது குறித்து அந்த சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் கபிஸ்தலம் போலீஸார் வழக்குப் பதிந்து மாணவியை தேடுகின்றனர்.