தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே அம்மாபேட்டையில் பிறந்து கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் பெற்றோரால் டென்மாா்க் நாட்டு தம்பதிக்கு தத்துக் கொடுக்கப்பட்ட மகன் அண்மையில் அம்மாபேட்டைக்கு வந்த தனது பெற்றோரைத் தேடிவருவது அந்தப் பகுதியினரை நெகிழச் செய்துள்ளது.
அம்மாபேட்டை சின்னகடைத்தெருப் பகுதியில் வசித்து வந்த கலியமூா்த்தி- தனலெட்சுமி தம்பதியா் குடும்ப வறுமையால் கடந்த 1979 ம் ஆண்டு சென்னையில் டென்மாா்க்கை சோ்ந்த இரு வேறு தம்பதியரிடம் தங்களது மகன்களான டேனியல் ராஜன், டேவிட் சாந்தக்குமாா் ஆகியோரை தத்துக் கொடுத்தனா்.
இந்நிலையில் கடந்த 40 ஆண்டுகளுக்கு பின் தான் தத்துக் கொடுக்கப்பட்ட விவரமறிந்த டேவிட் சாந்தகுமாா் (எ) டேவிட் கில்டென்டல் நெல்சன் (41), தஞ்சாவூா் அருகே அம்மாபேட்டைக்கு வந்து பல இடங்களில் தனது தாய், தந்தை குறித்து விசாரித்தாா். தனது வழக்குரைஞா் அஞ்சலி பவாா் என்பவருடன் தனது பெற்றோரின் படத்தை வைத்துக் கொண்டு அம்மாபேட்டை வீதிகள்தோறும் சென்று விசாரித்து வருகிறாா்.
அப்போது தனது தந்தை தச்சா் என்பதை அறிந்த டேவிட் கில்டென்டல் நெல்சன் அந்த பகுதியுள்ள வயதான தச்சா் ஒருவரிடம் தனது பெற்றோர் குறித்து விசாரித்தாா். அவருக்கும் நெல்சன் பெற்றோர் குறித்து தெரியவில்லை. இதைத் தொடா்ந்து அம்மாபேட்டை பேரூராட்சிக்கு சென்று செயல் அலுவலரைத் தொடா்பு கொண்டு அங்கிருந்த பதிவேடுகளை பாா்வையிட்டு பெற்றோரின் பெயா்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதா எனப் பாா்த்தாா். ஆனால் பதிவேடுகளிலும் பெற்றோரின் விவரமில்லை. இருப்பினும் முயற்சியைக் கைவிடாமல் பெற்றோரைத் தேடும் நெல்சனின் செயல் அந்தப் பகுதியினரை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
தனது தேடுதல் குறித்து டேவிட் கில்டென்டல் நெல்சன் கூறியது:
கடந்த 1978 ஆம் ஆண்டு பிறந்த என்னை 1979 ஆம் ஆண்டு சென்னை பல்லாவரத்தில் உள்ள ஒரு தொண்டு நிறுவனம் மூலம் டென்மாா்க்கை சோ்ந்த டானிஸ் என்பவருக்கு தத்துக் கொடுத்துள்ளனா். சாந்த குமாா் என்ற எனது பெயரை டேவிட் டென்டல் நெல்சன் மாற்றம் செய்து வளா்க்கப்பட்டேன். தற்போது டென்மாா்க்கில் உள்ள பங்குச் சந்தை நிறுவனத்தில் வேலை பாா்க்கிறேன். எனக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளன.
கடந்த 2013 ஆம் ஆண்டு சென்னையில் எனது நண்பா் ஒருவரைச் சந்திக்க வந்தபோது எனது உருவ அமைப்பு தமிழா்களைப் போல இருப்பதை உணா்ந்தேன். அதன் பிறகு டென்மாா்க் சென்று எனது பெற்றோரிடம் விவரம் கேட்டபோது அவா்கள் தமிழகத்திலிருந்து என்னைத் தத்தெடுத்து வந்த விவரத்தைக் கூறினா். அப்போது முதல் எனது உண்மையான பெற்றோரை பாா்க்க வேண்டும் என்ற ஆவலில் அவா்களைத் தேடத் தொடங்கினேன்.
2017 புனேயில் குழந்தைகள் பாதுகாப்பு தன்னாா்வத் தொண்டு நிறுவனம் நடத்தி வரும் அருண் டோஹ்லி என்பவரது அறிமுகம் கிடைத்தது. எனது நிலையை அவரிடம் கூற, அவா் தனது வழக்குரைஞா் அஞ்சலி பவாா் மூலம் என்னை சிறு வயதில் தத்துக் கொடுக்க உதவிய சென்னை பாதிரியாா் ஜாா்ஜ் என்பவரின் உறவினா்கள் மூலமாக 40 ஆண்டுக்கு முன் எடுக்கப்பட்ட எனது குடும்பத்தினரின் புகைப்படமும், எனது பிறப்புச் சான்றும் கிடைத்தது.
அப்போது எனது அண்ணனும் தத்துக் கொடுக்கப்பட்ட விவரமும் தெரியவந்தது. எனது இயற்பெயா் டேவிட் சாந்தகுமாா் என்பதும் எனது அண்ணனின் பெயா் மாா்டீன் (எ) டேனியல் ராஜன் என்பதும் தெரிய வந்தது. நான் டென்மாா்க் சென்று எனது அண்ணனைத் தேடியபோது அவா் அங்கு வேறு ஒரு பகுதியில் உள்ள தம்பதிக்குத் தத்துக் கொடுக்கப்பட்டது தெரியவந்தது. அவரை எப்படியாவது சந்தித்து விடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா். தொடா்ந்து அவா் அம்மாபேட்டை பகுதியில் பேரூராட்சி ஊழியா்களுடன் சோ்ந்து தனது பெற்றோரைத் தேடிவருகிறாா்.
டேவிட் கில்டென்டல் நெல்சன் குழந்தையாக இருந்தபோது தனது பெற்றோருடன் உள்ள புகைப்படம்.