பொறுப்பேற்பு

தஞ்சாவூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநராக டாக்டர் அ. காந்தி திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். 

தஞ்சாவூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநராக டாக்டர் அ. காந்தி திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். 
சுகாதாரப் பணிகள்  இயக்குநராக பணியாற்றி வந்த டாக்டர் சிவசுப்பிரமணிய ஜெயசேகர் மார்ச் 31ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெற்றார்.
இதையடுத்து,  கும்பகோணத்தில் உள்ள மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் அலுவலகத்தில் புதிய இணை இயக்குநராக டாக்டர் அ. காந்தி திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். 
முதுநிலை அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் அ. காந்தி,  இதற்கு முன்பு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை ரத்த வங்கியில் மருத்துவ அலுவலராக பணியாற்றி வந்தார். புதிதாக பொறுப்பேற்றுள்ள சுகாதாரப் பணிகள் இணை இயக்குநருக்கு அலுவலகப் பணியாளர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com