தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் ஓய்வு பெற்ற வேளாண்மைப் பட்டதாரிகள் சங்க உறுப்பினர்களுக்கான சிறப்பு மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சங்கத்தின் மாவட்டத் தலைவர் கோ. சுப்பிரமணியன் தலைமை வகித்தார். இதில், மீனாட்சி மருத்துவமனை மருத்துவர்கள் சரவணவேல், கார்த்திகேயன், உணவியல் நிபுணர் ஜெயந்தி ஆகியோர் மருத்துவ ஆலோசனை வழங்கினர். இதில், 50-க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.