பட்டுக்கோட்டை ஒன்றியம், அணைக்காடு கிராமத்தில் மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடை பெற்றது.
கூட்டத்தில், தஞ்சை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் பேசுகையில், தேர்தலில் வெற்றி பெற்றால் காங்கிரஸ், திமுக தேர்தல் அறிக்கையில் அளித்துள்ள அனைத்து வாக்குறுதிகளும் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்றார்.
கூட்டத்துக்கு அணைக்காடு ஊராட்சி முன்னாள் தலைவர் சுதாகர் தலைமை வகித்தார். மாவட்ட திமுக துணைச் செயலர் கா. அண்ணாதுரை, கிழக்கு ஒன்றியச் செயலர் என்.பி.பார்த்திபன், துணைச்செயலர் ஜான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமுக மாநிலப் பேச்சாளர் ந.மணிமுத்து சிறப்புரையாற்றினார்.
முன்னாள் ஊராட்சித் தலைவர்கள் ஏ.ஆரோக்கியராஜ், ஏ. ஜெர்மான்ஸ், மதிமுக கிழக்கு ஒன்றிய அவைத் தலைவர் ஜி.தேவசகாயம், ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் மனோகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி சி.என்.சக்கரவர்த்தி உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். திமுக ஊராட்சி செயலர் அண்ணாதுரை வரவேற்றார். ஒன்றிய பிரதிநிதி வி.அலெக்ஸ் நன்றி கூறினார்.