வாக்காளர் விழிப்புணர்வு முகாம்

பாபநாசம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி எஸ்.ராஜசேகர்

பாபநாசம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி எஸ்.ராஜசேகர் தலைமையில் வாக்காளர் விழிப்புணர்வு முகாம்  திங்கள்கிழமை நடைபெற்றது.
முகாமில், வாக்காளர்கள் வாக்களிக்கும் இயந்திரத்தில் தங்களது வாக்குகளை எவ்வாறு பதிவு செய்வது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதில்,  வழக்குரைஞர்கள், நீதிமன்ற அலுவலர்கள் வழக்குரைஞர்களின் உதவியாளர்கள் வழக்காடிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் இளங்கோ, வட்டாட்சியர் கண்ணன், மண்டல துணை வட்டாட்சியர்கள் தர்மராஜ், செல்வராஜ்,  தேர்தல் துணை வட்டாட்சியர் செந்தில்குமார், வருவாய் அதிகாரி ராஜ்குமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர். நிகழ்ச்சியை பாபநாசம் வட்ட சட்டப் பணிகள் குழு  தன்னார்வலர்கள் எஸ்.பி.ராஜேந்திரன், எஸ்.தனசேகரன் உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com