தஞ்சாவூர் பூண்டி அ. வீரையா வாண்டையார் நினைவு ஸ்ரீ புஷ்பம் கல்லூரியில் தமிழ்நாடு அரசுப் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் ஆர். வெங்கடாசலம் தலைமை வகித்தார். திருச்சி மாவட்டம், துறையூர் நகராட்சி ஆணையர் வே. நவேந்திரன், தஞ்சாவூர் வெற்றி ஐ.ஏ.எஸ். அகாதெமி நிர்வாக இயக்குநர் பி. செல்வக்குமார், இயக்குநர் செ. பூங்கொடி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கல்லூரி புலத் தலைவர்கள் என். ராசேந்திரன், வீ.ச. நாகரெத்தினம், தேர்வு நெறியாளர் கோ. கரிகாலன், மேலாண்மை இயக்குநர் ஆர். பிரகாஷ்பாபு,
தமிழ்த் துறை ஒருங்கிணைப்பாளர் நா. சிவாஜி கபிலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.