தஞ்சையில் வரும் ஆக. 15, 16,17-களில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில மாநாடு நடைபெற உள்ளது.
இதையொட்டி பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மாநில மாநாட்டு நிதியாக மத்தியக்குழு உறுப்பினர் பி. சம்பத்திடம் ரூ. 17 ஆயிரத்து 500 ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் மாவட்டச் செயலர் கோ. நீலமேகம், மாவட்டக் குழு உறுப்பினர் வி. கருப்பையா, சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலர் ஆர்.எஸ். வேலுச்சாமி, பூவாளூர் ஆர். மாணிக்கம், கோவிந்தராஜ், நகரக்குழு உறுப்பினர் எஸ். ஜகுபர்அலி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.