தஞ்சாவூர் மாவட்டத்தில் சுதந்திர தின விழாவையொட்டி டாஸ்மாக் மதுபானக் கடைகள் வியாழக்கிழமை (ஆக.15) மூடப்படவுள்ளது.
இதுகுறித்து ஆட்சியர் ஆ. அண்ணாதுரை மேலும் தெரிவித்திருப்பது: மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் சில்லறை விற்பனை மதுபானக் கடைகள், அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்கள், உரிமம் பெற்ற விடுதிகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் வியாழக்கிழமை மூடப்பட்டு, மதுபானம் விற்பனை செய்யப்பட மாட்டாது.