அய்யம்பேட்டையில் கிருஷ்ண ஜயந்தி

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டையில் உள்ள ருக்மணி, சத்யபாமா சமேத பிரசன்ன

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டையில் உள்ள ருக்மணி, சத்யபாமா சமேத பிரசன்ன ராஜகோபால சுவாமி கோயிலில் ஆவணி மாத தேய்பிறை, அஷ்டமிதி திதியையொட்டி கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜயந்தி விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவையொட்டி வெள்ளிக்கிழமை காலை  மூலவருக்கு வெண்ணைக்காப்பு செய்து மகாதீபாராதனை நடைபெற்றது. அன்று மாலை சுவாமி,அம்மன் உள்ளிட்டோருக்கு சிறப்பு திருமஞ்சனம், ஆராதனை, தொடர்ந்து வீதியுலா நடைபெற்றது.
தமிழக வேளாண் துறை அமைச்சர் இரா. துரைக்கண்ணு, மாவட்ட கூட்டுறவுச் சங்க ஒன்றியத் தலைவர் எஸ். மோகன்,கூட்டுறவு நகர வங்கி துணைத் தலைவர் என். சதீஷ், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் சி. முத்து, கே. முருகன், சங்க இயக்குநர்கள் பழனிசாமி, எஸ்.என். சேகர் உள்ளிட்டோர் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், அய்யம்பேட்டை சௌராஷ்ரா சபையினர் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com