பாபநாசம் அருகே பைக்கில் இருந்து விழுந்தவர் பலி

தஞ்சாவூர் மாவட்டம்,பாபநாசம் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்து தொழிலாளி சிகிச்சை பலனின்றி  வியாழக்கிழமை உயிரிழந்தார்.

தஞ்சாவூர் மாவட்டம்,பாபநாசம் அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்து தொழிலாளி சிகிச்சை பலனின்றி  வியாழக்கிழமை உயிரிழந்தார்.
பாபநாசம் அருகே ராஜகிரி புதுத்தெருவைச் சேர்ந்தவர் அப்துல்காதர் (55), தொழிலாளி. இவர் கடந்த சில நாள்களுக்கு  முன் பைக்கில் கோவில்தேவராயன்பேட்டையிலிருந்து  தஞ்சாவூர், கும்பகோணம்  பிரதான சாலையில் ராஜகிரி நோக்கிச் சென்று கொண்டிருந்தார். 
அப்போது  சாலையின் குறுக்கே வந்த ஆடுகள் மீது மோதாமலிருக்க  பைக்கை திருப்பிய போது தவறி விழுந்து  படுகாயமடைந்தார். தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார். பாபநாசம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com