தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் கிழக்குக் கடற்கரைச் சாலையையொட்டி அமைந்துள்ளது பிலால் நகர். இங்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்றாகிய தொழுகைக்காக 17 ஆண்டுகளுக்கு முன் பிலால் நகரில் தன்னார்வலர்களின் தீவிர முயற்சியால் ஹஜ்ரத் பிலால் (ரலி) மஸ்ஜித் கட்டப்பட்டது.
இந்த பள்ளிவாசலில் வழக்கமாக தினமும் 5 வேளை தொழுகை, மாலைங்களில் சிறுவர்களுக்கு குர்ஆன் ஓதுதல் மற்றும் நல்லொழுக்கப் பயிற்சி, அவ்வப்போது மஹல்லாவாசிகளின் திருமண நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பள்ளிவாசல் கட்டி முடிக்கப்பட்டு 17 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் வண்ணம் பூசும் பணி தொடங்கி கடந்த 1 மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வந்தது. தற்போது பணிகள் நிறைவு பெற்றதையடுத்து புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் பிலால் நகர் ஹஜ்ரத் பிலால் (ரலி) மஸ்ஜித்தின் அழகிய வெளிப்புற, உள்புற தோற்றம் தொழுகையாளிகளையும், பொதுமக்களையும் பெரிதும் கவர்ந்துள்ளது.