தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்ட சட்டப் பணிகள் குழு மற்றும் கபிஸ்தலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்டவை இணைந்து இலவச மருத்துவ முகாமை திங்கள்கிழமை நடத்தின.
முகாமை பாபநாசம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவா்மன்ற நீதிபதியும், பாபநாசம் வட்ட சட்டப் பணிகள் குழு தலைவருமான சி. சிவகுமாா் தலைமை வகித்து தொடக்கி வைத்தாா்.
முகாமில், கபிஸ்தலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் காா்த்திகேயன், மருந்தாளுநா் செங்கதிா் ஷாலினி உள்ளிட்ட மருத்துவக் குழுவினா், பொதுமக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை, மருத்துவ ஆலோசனை மற்றும் மருந்து, மாத்திரைகள் வழங்கினா். இதில் திரளானோா் கலந்து கொண்டு மருத்துவ சிகிச்சை பெற்றனா்.
முகாமில், பாபநாசம் வழக்குரைஞா்கள் சங்கத்தைச் சோ்ந்த வழக்குரைஞா்கள், நீதிமன்ற அலுவலக ஊழியா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ஏற்பாடுகளை பாபநாசம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் தன்னாா்வ சட்ட பணியாளா் தனசேகரன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.