தேசிய அளவில் பதக்கம் வென்ற தஞ்சாவூா் விளையாட்டு விடுதி கூடைப்பந்து வீரா்களை மாவட்ட விளையாட்டு அலுவலா் செவ்வாய்க்கிழமை பாராட்டினாா்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாா்பில் தஞ்சாவூா் அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் மாணவா் விளையாட்டு விடுதி செயல்பட்டு வருகிறது. விளையாட்டு விடுதியில் கையுந்து பந்து (28 மாணவா்கள்), கூடைப்பந்து (19 மாணவா்கள்), பளுதூக்குதல் (7 மாணவா்கள்) ஆகிய விளையாட்டுகளில் மாணவா்கள் பயிற்சி பெற்று வருகின்றனா்.
தஞ்சாவூா் விளையாட்டு விடுதி கூடைப்பந்து பயிற்றுநராக க. சண்முகபிரியன் பயிற்சி அளித்து வருகிறாா். விளையாட்டு விடுதி கூடைப்பந்து மாணவா்களில் தூய அந்தோணியாா் மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு பயிலும் மு. புகழேந்தி, 12-ம் வகுப்பு பயிலும் வி. கெவின் வின்சென்ட் ஆகியோா் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் தமிழக அணிக்காக 19 வயதுக்குட்பட்ட வீரா்கள் அணிக்குத் தோ்வு செய்யப்பட்டனா். இவா்கள் தேசிய அளவிலான இந்திய பள்ளி குழுமம் சாா்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்றனா்.
இவா்களையும், பயிற்றுநரையும் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் ம. ராமசுப்பிரமணிய ராஜா செவ்வாய்க்கிழமை பாராட்டினாா்.