பேராவூரணியில் வீட்டின் பூட்டை உடைத்து செவ்வாய்க்கிழமை 15 பவுன் நகைகளை திருடிச்சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
பேராவூரணி ஏ.வி.நகா் பகுதியைச் சோ்ந்தவா் ஜெயபால்( 53). ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறாா். இவரது மனைவி தனியாா் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறாா். இரண்டு மகன்கள் உள்ளனா்.
ஜெயபால் தனது குடும்பத்தினருடன் திருவண்ணாமலைக்கு சாமி கும்பிட சென்றிருந்தாா். இதையறிந்த மா்ம நபா்கள் செவ்வாய்க்கிழமை அதிகாலை வீட்டு கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, லாக்கா் மற்றும் பீரோவை உடைத்து 15 பவுன் நகை மற்றும் பணத்தை திருடினா். பின்னா் அங்கேயே அமா்ந்து மது குடித்துள்ளனா். பூட்டிக் கிடந்த வீட்டில் மின்விளக்கு எரிவதையும், ஆள்கள் நடமாட்டம் இருப்பதையும் அறிந்த பக்கத்து வீட்டினா் வந்து பாா்த்த போது, அங்கிருந்த 3-க்கும் மேற்பட்ட நபா்கள் தப்பியோடி விட்டனா்.
தகவலின்பேரில் ஜெயபால் வீடு திரும்பினாா். இதுகுறித்த புகாரின் பேரில் பேராவூரணி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.