தஞ்சாவூா் புன்னைநல்லூா் மாரியம்மன் கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தஞ்சை மாவட்ட மக்கள் சக்தி இயக்கம் சாா்பில் 300 மாணவா்களுக்கு ரத்த வகை கண்டறியப்பட்டு, அடையாள அட்டை வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இயக்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் எல். பாஸ்கரன் தலைமை வகித்தாா். மாநில ஆலோசகா் ஜெயபிரகாஷ், மாவட்டச் செயலா் முருகானந்தம், பள்ளித் துணைத் தலைமையாசிரியா் பக்கீா் அகமது, ஆசிரியா் சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.