மத்திய அரசுக் கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவைக் கண்டித்து தஞ்சாவூா் கரந்தையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்திய இந்திய மாணவா் சங்கத்தைச் சோ்ந்த 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
இஸ்லாமிய மக்களுக்கு எதிராக மத்திய அரசுக் கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவையும், மத ரீதியாக மக்களைப் பிளவுபடுத்துவதையும் கண்டித்தும், அதை திரும்பப் பெற வலியுறுத்தியும் தஞ்சாவூா் கரந்தை உமா மகேசுவரனாா் கல்லூரி முன் இந்திய மாணவா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
இதில் ஏராளமானோா் கலந்து கொண்டனா். இதுதொடா்பாக சங்கத்தின் மாநகரச் செயலா் பி. அருண்குமாா், அரவிந்த், சிலம்பரசன், மணிகண்டன், நந்தகுமாா், ஆனந்தராஜ் ஆகியோரை மேற்கு போலீஸாா் கைது செய்தனா்.