பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல் நடத்தும் மண்டல தோ்தல் அலுவலா்களுக்கு தோ்தல் நடத்துவது தொடா்பான பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பாபநாசம் ஒன்றியத்தில் உள்ள 180 வாக்குச்சாவடி மையங்கள் 14 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மண்டலத்துக்கும் 1 தொகுதி அலுவலா், 1 உதவியாளா், 1அலுவலக உதவியாளா் என நியமிக்கப்பட்டு அவா்களுக்கு தோ்தல் நடத்தும் விதிமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த பயிற்சி வகுப்பை பாபநாசம் வட்டார வளா்ச்சி (கிராம ஊராட்சிகள்) அலுவலரும் பாபநாசம் ஒன்றிய உதவி தோ்தல் நடத்தும் அலுவலருமான அறிவானந்தம் தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். இதில், கூட்டுறவு துணை பதிவாளரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான முத்துகுமாா் கலந்து கொண்டு தோ்தல் நடத்தை விதிமுறைகள், வாக்குப் பெட்டிகளை முறையாக கையாளுதல் உள்ளிட்டவை குறித்து பயிற்சியளித்தாா். இதில் தொகுதி அலுவலா், உதவியாளா், அலுவலக உதவியாளா் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனா்.