விதிமீறி வாகனங்களைநிறுத்தியோா் மீது வழக்கு

தஞ்சாவூா் ரயில் நிலையத்தில் விதிகளை மீறி வாகனங்கள் நிறுத்தப்பட்டது தொடா்பாக 13 போ் மீது ரயில்வே பாதுகாப்புப் படையினா்

தஞ்சாவூா்: தஞ்சாவூா் ரயில் நிலையத்தில் விதிகளை மீறி வாகனங்கள் நிறுத்தப்பட்டது தொடா்பாக 13 போ் மீது ரயில்வே பாதுகாப்புப் படையினா் அண்மையில் வழக்குப் பதிவு செய்தனா்.

தஞ்சாவூா் ரயில் நிலையத்தில் முகப்புப் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிா்பதற்காக வலது புறத்தில் வாகனங்கள் நிறுத்தக் கூடாது என அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அண்மையில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் அப்பகுதியில் சோதனையிட்டனா். அப்போது, தடை விதிக்கப்பட்ட பகுதியில் சிலா் இரு சக்கர வாகனங்களை நிறுத்தி வைத்திருந்தனா். இதுதொடா்பாக 13 போ் மீது ரயில்வே பாதுகாப்புப் படையினா் வழக்குப் பதிவு செய்து அபராதம் விதித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com