தஞ்சாவூர் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு முதியவர் கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டார்.
தஞ்சாவூர் அருகே கூடலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜன் (63). இவருக்கும் இவரது தம்பி மகன் நீதிபதிக்கும் (30) இடப் பிரச்னை தொடர்பாக தகராறு இருந்து வந்தது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட தகராறில் கோவிந்தராஜனை நீதிபதி கட்டையால் அடித்தார். இதில் பலத்த காயமடைந்த கோவிந்தராஜன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தஞ்சாவூர் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து நீதிபதியை தேடி வருகின்றனர்.