தஞ்சாவூர் அருகே முதியவர் கட்டையால் அடித்துக் கொலை

தஞ்சாவூர் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு முதியவர் கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டார்.
தஞ்சாவூர் அருகே முதியவர் கட்டையால் அடித்துக் கொலை

தஞ்சாவூர் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு முதியவர் கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டார்.

தஞ்சாவூர் அருகே கூடலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜன் (63). இவருக்கும் இவரது தம்பி மகன் நீதிபதிக்கும் (30) இடப் பிரச்னை தொடர்பாக தகராறு இருந்து வந்தது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட தகராறில் கோவிந்தராஜனை நீதிபதி கட்டையால் அடித்தார். இதில் பலத்த காயமடைந்த கோவிந்தராஜன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து தஞ்சாவூர் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து நீதிபதியை தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com