விவசாய இயந்திரத்தில் சிக்கி விவசாயியின் கை துண்டானது

ஒரத்தநாடு அருகே தெக்கூர்  கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ரவி. இவரது விவசாய நிலத்தில் கதிர் அறுவடை

ஒரத்தநாடு அருகே தெக்கூர்  கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ரவி. இவரது விவசாய நிலத்தில் கதிர் அறுவடை செய்ய தஞ்சையைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் திங்கள்கிழமை கதிர் அறுக்கும் இயந்திரம் மூலம் கதிர் அறுத்து கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக இயந்திரம் பழுதானதால், அதை சரிசெய்தபோது பிரபாகரனின் வலதுகை இயந்திரத்தில் சிக்கி துண்டானது.  இதையடுத்து, பிரபாகரன் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக ஒரத்தநாடு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com