ஒரத்தநாடு துணை மின்நிலையத்தில் பிப்ரவரி 16ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவிருப்பதால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் ஒரத்தநாடு, கண்ணதங்குடி, ஆழியவாய்க்கால், பஞ்சநதிக்கோட்டை, சேதுராயன்குடிக்காடு மற்றும் அதை சார்ந்த பகுதிகளில் சனிக்கிழமை (பிப். 16) காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின்விநியோகம் இருக்காது என ஒரத்தநாடு மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.