விவேகானந்தர் பிறந்த நாளை முன்னிட்டு, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை பாலாஜி நகரில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சனிக்கிழமை பூட்டு போட முயன்ற இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த 14 பேரை போலீசார் கைது செய்தனர்.
விவேகானந்தர் பிறந்த நாளில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விட வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பி வந்த இந்து மக்கள் கட்சியினர் இக்கடைக்குப் பூட்டு போட முயன்றனர். இந்து மக்கள் கட்சி மாநில இளைஞர் அணிச் செயலர் கார்த்திக்ராவ் தலைமையில் மாவட்டப் பொதுச் செயலர் சுகுமார், மாவட்டச் செயலர் செல்வ சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதுதொடர்பாக 14 பேரை போலீஸார் கைது செய்தனர்.