தஞ்சாவூர் அருகிலுள் பூண்டி அ. வீரையா வாண்டையார் நினைவு ஸ்ரீ புஷ்பம் கல்லூரியில்அறிவியல் விழிப்புணர்வுக் கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.
இக்கல்லூரியின் விலங்கியல், தாவரவியல், வேதியியல், இயற்பியல் துறை முதுகலை மாணவர்களுக்கான உயர்வை நோக்கிய பயணம் என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்குக்கு கல்லூரி முதல்வர் வர் மேஜர் வெங்கடாசலம் தலைமை வகித்தார். விலங்கியல் துறை முன்னாள் தலைவர் அப்துல் ரகுமான் சிறப்புரையாற்றினார். அறிவியல் புலத் தலைவர் வி.எஸ். நாகரத்தினம் வாழ்த்துரையாற்றினார். துறை ஒருங்கிணைப்பாளர்கள் த.குமார் (தாவரவியல்), கி.ரவிச்சந்திரன் (இயற்பியல்), ரமேஷ் (வேதியியல்), பி. நடராஜன் (விலங்கியல்), கல்லூரி உள்தர மதிப்பீட்டுக் குழுச் செயலர் வி.நந்தகுமார் உள்ளிட்டோர் கருத்தரங்கில் பங்கேற்றனர்.