தேசிய மருத்துவர் தினத்தை முன்னிட்டு, மருத்துவர்களின் சேவையை பாராட்டும் வகையில், அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கத்தினர் திங்கள்கிழமை அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் ஏ.அன்பழகன், கௌசல்யா, கார்த்திகேயன், கலைவாணி, சர்மிளா ஆகியோரை நேரில் சந்தித்து அனைவருக்கும் சங்கத்தின் சார்பில் சால்வை அணிவித்து, மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்று நூலான
சத்தியசோதனை புத்தகத்தை நினைவுப்பரிசாக வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கத் தலைவர் எம்.அப்துல் ஜலீல், செயலர் எம்.நிஜாமுதீன், பொருளாளர் எஸ்.எம்.முகமது முகைதீன், இயக்குநர்கள் பேராசிரியர் கே.செய்யது அகமது கபீர், என். ஆறுமுகசாமி, எம்.அப்துல் ரஹ்மான் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.