அறுவடை இயந்திரம் மோதியதில்  பெண் பலி

கும்பகோணம் அருகே அறுவடை இயந்திரம் மோதியதில் பலத்தக் காயமடைந்த பெண் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

கும்பகோணம் அருகே அறுவடை இயந்திரம் மோதியதில் பலத்தக் காயமடைந்த பெண் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
கும்பகோணம் அருகேயுள்ள உதயநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரன் மனைவி தனம் (60). இவர் அதே பகுதியில் உள்ள வயலில் அறுவடைப் பணியில் அண்மையில் ஈடுபட்டார். அப்போது, இவர் மீது வயலில் இயக்கப்பட்ட அறுவடை இயந்திரம் மோதியது. இதில், பலத்தக் காயமடைந்த தனம் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தனம் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து கும்பகோணம் தாலுகா போலீஸார் விசாரித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com