தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை வட்டாரத்தில் 50 சதவிகித மானியத்தில் விவசாய இடுபொருள்கள் வழங்கப்படுகின்றன என வேளாண்மை உதவி இயக்குநர் ஏ. சுஜாதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது: அம்மாபேட்டை வட்டாரத்தில் அம்மாபேட்டை, சாலியமங்கலம், திருக்கருகாவூர், மெலட்டூர் (இருப்பு - அன்னப்பன்பேட்டை) ஆகிய 4 வேளாண் விரிவாக்க மையங்களிலும் சம்பா சாகுபடிக்குத் தேவையான சி.ஆர் 1009 சப்-1 சான்று விதைகள், நெல் நுண்ணூட்ட உரம், திட, திரவ உயிர் உரங்கள், சூடோமோனாஸ் - எதிர் உயிரி, பூச்சி மருந்து, தார் பாய்கள் ஆகிய அனைத்து இடுபொருள்களும் 50 சதவிகித மானியத்தில் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
தேவைப்படும் விவசாயிகள் தங்கள் ஆதார் அட்டை நகலுடன் தங்களது பகுதி வேளாண் விரிவாக்க மையங்களை அணுகி பயன் பெறலாம்.