50%  மானியத்தில் விவசாய இடுபொருள்கள்

தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை வட்டாரத்தில் 50 சதவிகித மானியத்தில் விவசாய இடுபொருள்கள் வழங்கப்படுகின்றன என வேளாண்மை உதவி இயக்குநர் ஏ. சுஜாதா தெரிவித்துள்ளார்.


தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை வட்டாரத்தில் 50 சதவிகித மானியத்தில் விவசாய இடுபொருள்கள் வழங்கப்படுகின்றன என வேளாண்மை உதவி இயக்குநர் ஏ. சுஜாதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது: அம்மாபேட்டை வட்டாரத்தில் அம்மாபேட்டை, சாலியமங்கலம், திருக்கருகாவூர், மெலட்டூர் (இருப்பு - அன்னப்பன்பேட்டை) ஆகிய 4 வேளாண் விரிவாக்க மையங்களிலும் சம்பா சாகுபடிக்குத் தேவையான சி.ஆர் 1009 சப்-1 சான்று விதைகள், நெல் நுண்ணூட்ட உரம், திட, திரவ உயிர் உரங்கள், சூடோமோனாஸ் - எதிர் உயிரி, பூச்சி மருந்து, தார் பாய்கள் ஆகிய அனைத்து இடுபொருள்களும் 50 சதவிகித மானியத்தில் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
தேவைப்படும் விவசாயிகள் தங்கள் ஆதார் அட்டை நகலுடன் தங்களது பகுதி வேளாண் விரிவாக்க மையங்களை அணுகி பயன் பெறலாம். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com