பேராவூரணி ஒன்றிய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுக்கு, உறுப்பினர் அட்டை வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு சிபிஐ ஒன்றியச் செயலாளர் டி.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் பா. பாலசுந்தரம் தொடக்க உரையாற்றினார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் மு.அ. பாரதி, கட்சி உறுப்பினர்களுக்கு அட்டை வழங்கி சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் , கட்சி நிர்வாகிகள், ராஜமாணிக்கம், ரவி, கருணாமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, காசியார், அண்ணாதுரை, சோமசுந்தரம், கோபால், கருப்பையா கணேசன், நகரக்குழு உறுப்பினர்கள் பாரதி நடராஜன், சுந்தர்ராசு, பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.