பாபநாசம் அருகே பைக்கிலிருந்து விழுந்தவர் சாவு
By DIN | Published On : 12th June 2019 08:32 AM | Last Updated : 12th June 2019 08:32 AM | அ+அ அ- |

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே கடந்த ஞாயிற்றுகிழமை பைக்கிலிருந்து தவறி விழுந்த இளைஞர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
கும்பகோணம் ஆணைக்கார பாளையத்தெருவைச் சேர்ந்தவர் மனோகரன் மகன் மனோஜ்குமார் (24), தியாகசமுத்திரம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் மாணிக்கம் மகன் ராஜகுரு (27), விவசாயி.
இருவரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை பைக்கில் கூனஞ்சேரி கடைவீதியிலிருந்து தியாகசமுத்திரம் நோக்கி அண்டகுடி பிரதான சாலையில் சென்றபோது நிலைதடுமாறி விழுந்த இருவரும் காயமடைந்தனர். இவர்களில் பலத்த காயமடைந்த ராஜகுரு தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புகாரின் பேரில் கபிஸ்தலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.